” உப்புக் கடலை உரசிய நினைவுகள்”கவி நூல் வெளியிடு!
குமுதினி படுகொலை நினைவு நாளில் பசுந்தீவு உருத்திரன் எழுதிய ”
உப்புக் கடலை உரசிய நினைவுகள்”என்ற கவி நூல் வெளியிடப்பட்டுள்ளது. குமுதினி
படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , நெடுந்தீவு இறங்கு
துறைக்கு அருகில் உள்ள குமுதினி படுகொலை நினைவு தூபியில் இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து, கடலில் மலர் தூபி அஞ்சலி செலுத்திய
பின்னர் கவிநூல் வெளியீடு கடலில் , குமுதினி படகில் இடம்பெற்றது. அதனை
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் , மரக்கன்றுகள்
வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.






கருத்துகள் இல்லை