குழந்தையை அடித்துத் துன்புறுத்திய தந்தை கைது!!

 


தனது பிள்ளையை பணயக்கைதியாக வைத்துக்கொண்டு வெளிநாட்டு தாயிடம் பணம் கேட்ட கொடூர தந்தை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பலாங்கொட பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதான மதுஷிகா தனது நான்கு வயது மகளின் எதிர்காலத்திற்காக சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார்.

பணத்தை சேமிப்பதற்கும் தனது மகளின் பாதுகாப்பை தனது கணவரிடம் ஒப்படைத்து, விட்டு நாட்டிற்கு சென்றுள்ளார் ஆனால் அவளுடைய நம்பிக்கைகள் தகர்க்க அதிக நேரம் எடுக்கவில்லை.

குறித்த பெண்ணின் கணவர் கொடூரமான முறையில் சிறுமியை உடல்ரீதியாக துன்புறுத்தி அதை வீடியோ எடுத்து மனைவி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸார் தந்தையை கைது செய்தனர்.

வெளிநாடு சென்ற மனைவியிடம் பணம் பெறும் நோக்கில் சிறுமியை துன்புறுத்தியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தந்தையை பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி தற்போது பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குழந்தையைப் பணயக் கைதியாக வைத்துக்கொண்டு தாயிடம் பணம் கேட்க துணிந்திருக்கும் இப்படிப்பட்டவர்கள் மீது அதிகபட்சமாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.