மீண்டும் மிரட்டும் பாபா வாங்கா கணிப்பு!

 


2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன.

உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன் கூறிய சில கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பாபா வங்கா கணிப்புகளில் செப்டம்பர் 11, 2001 இல் அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மைய பயங்கரவாத தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பற்றியும் அவர் சில கணிப்புகளைச் கணித்து வைத்துள்ளார். அதன்படி 2024-ல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

உலக வெப்ப அலைகளின் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவியல் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. இந்த வெப்ப அலைகளின்போது உச்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது.

1979 முதல் 1983 வரையிலான உலகளாவிய வெப்ப அலைகளின் சராசரி காலம் 2016 முதல் 2020 வரை 8 நாட்களில் இருந்து 12 நாட்களாக அதிகரித்துள்ளது என்று ஆய்வு காட்டுகிறது.

நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கனவே பணவீக்கத்தின் பிடியில் இருப்பதாக அலையன்ஸ் லைஃப் கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.