இளைஞன் ஒருவர் காதலி வீட்டில் சடலமாக மீட்பு!!
யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் , பெண்ணின் வீட்டாருக்கும் மகளின் காதல் தொடர்பு தெரிந்து இருந்தமையால் , காதலி வீட்டிற்கு காதலன் சுதந்திரமாக வந்து செல்வதாகவும் தெரிய வந்துள்ளனது.
இந்நிலையில் காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் சடலமாக காணப்பட்டதில் , தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக இளைஞனின் தாயார் மரண விசாரணையில் தெரிவித்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சுன்னாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை