நாட்டில் தீவிரமாக தேடுப்படும் தமிழர்!!


 நாட்டில் பொலிஸாரால் தீவிரமாக தேடப்படும் நபருக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் கூலித்தொழிலாளி செய்துவரும் 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவரே குற்ற புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளான இலங்கையை சேர்ந்த 4 பேர்தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய குறித்த சந்தேக நபரை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கடந்த 23ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 34 வயதுடைய நபரொருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியாவில் கைது இலங்கையர்களில் ஒருவருடன் அக்குழுவினர் இந்தியா செல்வதற்கு முந்தைய நாள் அவர் தொலைபேசியில் பேசியதும், நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மீண்டும் ஆஜராகுமாறு குறித்த நபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.