பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!!


 யாழில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 5 பேர் அடங்கிய குழு கொழும்பு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை தாயார் கண்முன்னே வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (01-05-2024) காலை 5 மணியளவில் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது அயலவர்களால் தொலைபேசியில் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், பொலிஸார் அந்த இடத்திற்கு வருவதற்குள் மாணவனைத் தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்த போது தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பொலிஸ் முறைப்பாடு அளிக்க மறுத்துவிட்டதாகத் தெரியவருகின்றது.

தன்னை தனது நண்பர்கள் தவறுதலாக தாக்கியதாக கூறி பொலிஸாரை மாணவன் அனுப்பிவிட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.