12 உறவுகளுக்கு பிதிர்க்கடன் செலுத்திய தந்தை

 


யுத்தத்தின் போது மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் முள்ளிவாய்க்காலில் பிதிர்கடனை நிறைவேற்றி அஞ்சலியை செலுத்தி இன்று (2024.05.18) நந்திக்கடலில் கதறி அழுந்து கண்ணீருடன் பிதிர்க்கடன் நிறைவேற்றியுள்ளார்.

தனது குடும்பத்தினரின் இழப்பின் வலியை அவர் கூறுகையில்,

கிளிநொச்சி திருவையாற்றினை நிரந்தர வதிவிடமாக கொண்ட எங்களுடைய உறவுகள் 25 பேர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு வலயர்மடம் பகுதியில் பதுங்கு குழிகள் அமைத்து அங்கே இருந்தோம். 13.02.2009 அன்று நள்ளிரவு வேளையில் பாரிய சத்தம் கேட்டது.

நாங்கள் இருந்த பதுங்கு குழிக்கு மேலுள்ள மரத்தின் மீது எறிகணைகள் விழுந்தன. என்னுடைய உறவுகள் 12 பேர் அவ்விடத்திலேயே இறந்துவிட்ட நிலையில் நானும் காயமடைந்து சுயநினைவற்றிருந்தேன்.

அந்த இடத்தில் எங்களை பார்ப்பதற்கு யாருமே இருக்கவில்லை. அதன் பின்னர் நான்கு தினங்கள் கழித்து எங்களை ICRC கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள்.

வைத்தியசாலையில் வைத்தே நடந்த அசம்பாவிதம் எனக்கு தெரியவந்தது. என்னுடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்ததாக அறிந்துகொண்டேன்.

அதன் பின்னர், சில வருடங்கள் கழித்து மீள் குடியமர எமது சொந்த இடத்துக்கு வந்து தற்போது அங்கேயே வசிக்கிறோம். எமது கடந்த கால நிலையை என்றுமே மறக்கமுடியாது.

ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவுநாளுக்கு வந்து எமது உறவுகளுக்கு அஞ்சலி செலித்தி வருகிறேன் என தனது வலிகளை அவர் கண்ணீர் மல்க கூறினார்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.