குளிர்பானம் குடிப்பவர்கள் தெரிந்து கொள்ள!!

 


கோடையில் குளிர் பானங்களை குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். பெரும்பாலானோர் தாகத்தைத் தணிக்க குளிர் பானங்களைத் தேடுகிறார்கள். குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, குளிர் பானங்களின் சுவை அனைவருக்கும் பிடிக்கும்.


சிறுவர்கள் முதல் முதியர்கள் வரை விரும்பும் இந்த குளிர்பானத்தில் எத்தனை பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரியுமா? என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்று பார்ப்போம்.


அதிக குளிர்பானம் குடிப்பது கல்லீரலை பாதிக்கிறது. இதன் காரணமாக கொழுப்பு கல்லீரல் உருவாகும் அபாயம் உள்ளது. அதிக அளவில் குளிர் பானங்கள் கல்லீரலைச் சென்று பிரக்டோஸை கொழுப்பாக மாற்றுகிறது.


அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உங்கள் மூளைக்கு தீங்கு விளைவிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. இந்த விஷயங்களுக்கு நீங்கள் அடிமையாகத் தொடங்கும் போது, ​​அது மூளையின் செயல் திறனை பாதிக்கத் தொடங்குகின்றன.


அதிகப்படியான குளிர் பானங்களை குடிப்பது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும், அத்தகைய சூழ்நிலையில் இரத்த சர்க்கரை அதிகமாகிறது. இன்சுலின் என்பது இரத்தத்தில் இருந்து உயிரணுக்களுக்கு குளுக்கோஸைக் கடத்தும் ஒரு ஹார்மோன் ஆகும்


அதிக அளவில் குளிர் பானம் குடிப்பதால் உடலில் கூடுதல் சர்க்கரை ஏற்படுகிறது, இது உடல் பருமன் அதிகரிக்கிறது. சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதால் உடலில் லெப்டின் எதிர்ப்பு சக்தி உண்டாகி, உடல் பருமனை உண்டாக்கும். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.