வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உப்புநீர் எடுக்கும் நிகழ்வு!!

 


வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் உப்பு நீரிலே விளக்கு எரிப்பதற்காக தீர்த்தமாடுகின்ற உற்சவம் திங்கட்கிழமை (13) மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.


முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திலேயே விசேட வழிபாடுகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து முல்லைத்தீவு பெருங்கடலிலே தீர்த்தம் எடுப்பதற்காக தற்போது தீர்த்தக்குடம் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய வீதிகளூடாக முல்லைத்தீவு பெருங்கடலை நோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.


முல்லைத்தீவு பெருங்கடலுக்குத் தீர்த்தக்குடம் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து முல்லைத்தீவு பெருங்கடலிலே தீர்த்தம் எடுக்கப்பட்டு பாரம்பரிய வழிகளுடாக மீண்டும் முளளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தை வந்தடைந்து அங்கே காட்டு விநாயகர் ஆலயத்திலே விசேடமாக உப்பு நீரில் விளக்கெரிகின்ற கண்கொள்ளாக் காட்சி இடம்பெற இருக்கின்றது.


அதனை தொடர்ந்து தீர்த்தக்குடம் மீண்டும் முள்ளியவளை காட்டு விநாயகர் நோக்கிச் செல்லும் பாதையிலே பக்தர்கள் தீர்த்த குடத்தை வரவேற்பதற்காகக் கும்பங்கள் வைத்து தேங்காய்கள் உடைத்து வழிபடுவதற்காகத் தயாராகி வருகின்றனர்.  


அதனை தொடர்ந்து தீர்த்தக்குடம் மீண்டும் முள்ளியவளை காட்டு விநாயகர் நோக்கிச் செல்லும் பாதையிலே பக்தர்கள் தீர்த்த குடத்தை வரவேற்பதற்காகக் கும்பங்கள் வைத்து தேங்காய்கள் உடைத்து வழிபடுவதற்காகத் தயாராகி வருகின்றனர்.  


Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.