கோயிலில் ஏற்பட்ட கைகலப்பில் 3 குருக்கள்மார் கைது!!

 


யாழில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே இவர்கள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோவில் மகோற்சவத்தினை நடாத்திய குருக்களின் நெருங்கிய உறவு முறைக்காரர் ஒருவர் வெளிநாட்டில் காலமான நிலையில் அவர் மகோற்சவ திருவிழாக்களை நடாத்தியதாக குருக்களுடன் சிலர் முரண்பட்டுள்ளனர்.

அதன் போது இவர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , எதிராளிகளான மூவரையும் பொலிஸார் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

அவர்கள் விசாரணைக்கு செல்லாத காரணத்தால், பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை குறித்த ஆலய குருக்கள் பரம்பரையினருக்கு இடையில் நீண்ட காலமாக ஆலயம் தொடர்பில் முரண்பாடு காணப்பட்டு வருகிறது. இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன.

இந்த நிலையில் கடந்த மாதம் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகி, கடந்த வியாழக்கிழமை (20-06-2024) தேர் திருவிழா இடம்பெற்று, நேற்றைய தினம் (22-06-2024) பூங்காவன திருவிழா இடம்பெறவுள்ள நிலையிலேயே குறித்த கைகலப்பு இடம்பெற்றுள்ளது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.