ஆபாச காணொளி அனுப்பிய அதிகாரி.கைது!!

 


இரு பெண் கடற்படை பணியாளர்களுக்கு வட்ஸ்அப் மூலம் ஆபாச காணொளிகளை அனுப்பியதாகக் கூறப்படும் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர்  கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்படுள்ளார்.

இனந்தெரியாத நபரொருவர் தனது வட்ஸ்அப் இலக்கத்துக்கு ஆபாச காணொளிகளை அனுப்பி தன்னைப் பாலியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு அழைப்பதாகப் பெண் கடற்படை பணியாளர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் தனது   வட்ஸ்அப் இலக்கத்துக்கு ஆபாச காணொளிகளை அனுப்பி தன்னைப் பாலியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு அழைப்பதாக மற்றுமொரு பெண் கடற்படை பணியாளரொருவரிடமிருந்தும் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

அது தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த இரண்டு முறைப்பாடுகளுடனும் தொடர்புடையவர் ஒரே நபர் என தெரியவந்ததையடுத்து, சந்தேக நபர் பலப்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதோடு சம்பவம்  தொடர்பில்  சந்தேக நபரான முன்னாள் கடற்படை அதிகாரி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார்  கூறியுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.