தாயுடன் சிநேகம் - லண்டன் வாழ் தமிழரை தாக்கிய பிள்ளைகள்!!

 


லண்டனிலிருந்து வந்த 47 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் மீது , கொழும்பு வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் கடும்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நண்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள இன்னொரு வீட்டில் வசித்து வந்த முஸ்லீம் குடும்பப் பெண் ஒருவருடன் தகாத உறவைப் பேணியதாகத் தெரிவித்தே , பெண்ணின் பிள்ளைகள், தமிழ்க் குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக கூறப்படுகின்றது..

குறித்த பெண்,  குடும்பஸ்தரின் வீட்டுக்குள் இருந்த நிலையில் , வெளியே சென்று வந்த அரது பிள்ளைகள் தாயை அங்கிருந்து அழைத்த பின் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அங்கிருந்தவர்கள் கூறியாதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து லண்டன் வாழ் குடும்பஸ்தர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது..

முஸ்லீம் குடும்பப் பெண்ணின் கணவன் அரபு நாடுகளுக்கு வியாபார நிமிர்த்தம் சென்று வருபவர் என்றும், 41 வயதான பெண்ணுக்கு 19 வயது, 17 வயதில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.       


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.