தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை தந்தவர் மகிந்தவாம்!!


 வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதியும் தனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச அநுரகுமார திஸாநாயக்க வடக்கிற்குச் சென்று 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக கூறியதை நான் பார்த்தேன்.

ஆனால் விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர் மஹிந்த ராஜபக்ஷ என நாமல் கூறினார்.

வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்து 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அவர்களுக்கு முதலமைச்சரை நியமிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வடக்கில் வாக்களிக்கும் உரிமையைக் கூட புலிப் பயங்கரவாதிகள் மட்டுப்படுத்தியிருந்தனர் .

13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், வடக்கில் வாக்குகளுக்காகவும், அரசியல் இலாபங்களுக்காகவும் காத்துக்கொண்டு ஏனைய கட்சிகள் இவ்வாறு பேசுவது உண்மையில் வருத்தமளிக்கிறது .

எனவே 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் மாகாணசபை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எவரும் சத்தம் போடாமல் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன் அதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும் .

அவர்கள் வடக்கில் மக்களின் உணர்வுகளுடன் இந்த விளையாட்டை ஆடுவதால், வாக்குகளை மூட அரசியல் கருவியாகப் பயன்படுத்துகின்றனர் எனவும் நாமல் ராஜபக்க்ஷ சாடினார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.