ஜனாதிபதியின் திடீர் விஜயம்!!

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் (16-06-2024) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி ரணில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்  காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று குறித்த சந்திப்பு நடைபெற்றதுடன், அவருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட ஜனாதிபதி மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.

இதேவேளை நாட்டில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்குவதற்கான "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் கீழ் மன்னாருக்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிகள் தற்போதும் வழங்கப்பட்டுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.