காதலிக்காக திருடனாக மாறிய மகன்!!


 காதலியை சந்தோசப்படுத்த தந்தையின் சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய மகன் கைது செய்யப்பட்டுளார். குருநாகலில் இடம்பெற்றைச்சம்பவ்ம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காதலிக்கு அன்பளிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தந்தையின் நகைகளை திருடிய காதலன் நகைகளை வங்கி ஒன்றில் அடகு வைப்பதற்காக சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி சம்பவத்தில் காதலியின் 54 வயதுடைய தந்தையும் உடந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தந்தை தனது தொழில் நிமித்தமாக சென்ற போது வீட்டிற்கு நுழைந்த மகன் தந்தையின் நகைகளை திருடியுள்ளார்.

வீடு திரும்பிய தந்தை நகைகளை காணாது அதிச்சியடைந்த நிலையில் மகன் அதனை களவாடியது தெரியவந்துள்ளது. அது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்ட நிலையில் ​​அடகு வைக்கப்படவிருந்த 03 தங்க சங்கிலிகள், 04 மோதிரங்கள், 03 பென்டன்ட்கள், ஒரு கை சங்கிலி மற்றும் இரண்டு ஜோடி காதணிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதோடு அடகு வைத்த பணத்தில் காதலிக்கு பரிசுகள் வாங்கத் தயாராக மகன் இருந்ததும் தெரியவந்துள்ளது. தந்தையின் நகையை அடகு வைத்த பணத்தில் அவருக்கும் காதலிக்கும் ஒரு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மற்றும் இரண்டு பவர் பேங்க் வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதேவேளை கைதான 23 வயதான சந்தேக நபர் மூன்று வன்முறை குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாகவும் அந்த வழக்குகள் இன்னும் விசாரணையில் இருப்பதுடன் சந்தேகநபர் ஐந்தாண்டு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.