நீரின்றி வாடும் காரைநகர் மக்கள்!!


 யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால், காரைநகர் பகுதி மக்கள் குடிநீரின்றி தவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசர் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது , கல்லுண்டாய் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் விபத்துக்குள்ளான வாகனங்கள் இரண்டையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

அத்துடன் , பௌசர் சாரதியையும் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட சாரதி பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பௌசரை பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அதனால் காரைநகர் பகுதிக்கான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தண்ணீர் பௌசரை பொலிஸார் விரைவில் நீதிமன்றில் பாரப்படுத்தி, வாகனத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைநகர் மக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.