வெளிநாட்டு ஆசை - விமான நிலையத்தில் தமிழ் யுவதி கைது!!

 


திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது யுவதி ஒருவர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது யுவதியின் பயணத்திற்கு உதவிய தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடியகல்வு சேவை கரும பீடத்திற்குச் சென்ற சந்தேகநபரான பெண் அங்கு,  கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதைக் கண்டறிந்ததால், யுவதி தலைமை குடிவரவு அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், மற்றொரு பெண்ணின் கடவுச்சீட்டில் இந்தப் பெண்ணின் தகவல்களைப் பதிவு செய்து போலியாக கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதான யுவதியும் , தரகரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.