தினை அரிசி கஞ்சி!!


 தேவையான பொருள்கள்

தினை அரிசி - 1 கப் (2-3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தது)

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

நறுக்கிய பிஸ்தா - 2-3 டீஸ்பூன்

நறுக்கிய பாதாம் - 2-3 டீஸ்பூன்

நறுக்கிய முந்திரி பருப்பு - 2-3 டீஸ்பூன்

நறுக்கிய அக்ரூட் பருப்புகள் - 2-3 டீஸ்பூன்

பால் - 3 கப்

நறுக்கிய வெல்லம் - அரை கப்

இலவங்கப்பட்டை தூள் - கால் டீஸ்பூன்

பச்சை ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்

வாழைப்பழங்கள் - அலங்கரிப்பதற்கு ஏற்ப

ஸ்ட்ராபெர்ரிகள் - அலங்கரிப்பதற்கு ஏற்ப

விதைகளின் கலவை - சிறிது அளவு

புதினா இலைகள் - சிறிது அளவு


செய்யும் முறை

ஒரு பாத்திரத்தில் நய் ஊற்றி அது சூடாகியதும் தினை அரிசியை சோத்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். இதன் பின்னர் இரண்டரை கப் சூடான நீரை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.


இதை மூடி 8-10 நிமிடங்கள் சூடாக்கிய பின்னர், 10-15 நிமிடங்கள் ஆற வைக்கவும். பின்னர் இந்த கலவையில் பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட், பால் சேர்த்து சேர்த்து நன்கு கலக்கவும்.


அதன் பிறகு 4-5 நிமிடங்கள் சமைத்து, வெல்லம் சேர்த்து கரையும் வரை வதக்கவும். பின்னர் இலவங்கப்பட்டை தூள், பச்சை ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கிய பின் பரிமாறலாம் தேவைப்பட்டால் இந்த கஞ்சியின் மேல் வாழைப்பழத் துண்டுகள் மற்றும் ஸ்ட்ராபெரி துண்டுகளை அடுக்கி சாப்பிடலாம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.