காளான் கிரேவி செய்வது எப்படி ?


தேவையான பொருட்கள்:


♦️காளான் : 1 கப் (நறுக்கியது).


♦️குடைமிளகாய்: 1/2 (நறுக்கியது).


♦️பெரிய வெங்காயம்: 1/2 கப் (பொடியாக நறுக்கியது) + 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது).


♦️தக்காளி : 2 (நறுக்கியது).


♦️பிரஷ் க்ரீம்: 3 டேபிள் ஸ்பூன்.


♦️இஞ்சி பூண்டு பேஸ்ட்: 1 டேபிள் ஸ்பூன்.


♦️மிளகாய் தூள்: 1/2 டீஸ்பூன்.


♦️கரம் மசாலா: 1 டீஸ்பூன்.


♦️கொத்தமல்லி : சிறிது.


♦️எண்ணெய் : 3 டீஸ்பூன் .


♦️உப்பு: தேவையான அளவு.


வறுத்து அரைப்பதற்கு :


♦️வரமிளகாய்: 2.


♦️மல்லி: 2 டீஸ்பூன்.


செய்முறை:


முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அரைப்பதற்கு பின்னர் சறுத்து கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.


பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1/2 கப் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்க வேண்டும்.


பின் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனை வாணலியில் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.


அடுத்து மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வெங்காயத்தை சேர்த்து வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதே வாணலியில் காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வதக்கி வைத்துள்ள காளானை கொதிக்கும் கிரேவியில் சேர்த்து, காளானை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.


காளானானது மென்மையானதும், அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கிரேவியில் இருந்து நல்ல நறுமணம் வீசும் போது, அதில் வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து கிளறி, பின் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், காளான் கிரேவி ரெடி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.