பொலிஸ் என்று ஆள்மாறாட்டம் செய்தவர் கைது!!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரிடம் தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞளே இவ்வாரு கைதாகியுள்ளார்.
தன்னை பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திய சந்தேக நபர், நபர் ஒருவரை மிரட்டி 3 இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்றுள்ளார்.
பணத்தினை கொடுத்த நபர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று புதன்கிழமை (24) பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை