கணவன் ஒருவனின் மோசமான செயல்!!
மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை ஆடைகளை அவிழ்க்க கட்டாயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் திரைப்பட VFX கலைஞராக பணியாற்றுவரும் குறித்த பெண் சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றிவரும் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொடுக்கும் கணவர் TRUTH OR DARE விளையாடி, தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும்படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார்.
இதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் கணன் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் தங்களின் 5 வருடதிருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இது போன்று தன்னை நண்பர்கள் முன்னிலையிலும் தனியாக இருக்கும்போதும் அடித்து துன்புறுத்தினார் என்று அப்பெண் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை