யாழில் காணி மோசடி!!

 


வெளிநாட்டு வாழ் யாழ்ப்பாண தம்பதியை ஏமாற்றி, யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெளிநாடொன்றில் வசிக்கும் தம்பதியினர் , மருதங்கேணி பகுதியில் உள்ள தமது காணி ஒன்றிக்கு ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு அற்றோணி தத்துவத்தை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் தனக்கு அற்றோணி தத்துவம் ஊடாக கிடைக்கப்பெற்ற காணியை சூழ உள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தியுள்ளார்.

அதோடு நில அளவையாளர் ஊடாக காணி வரைபடத்தினை கீறி அற்றோணி தத்துவ காணியை பிறிதொரு நபருக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. இதை அடுத்து , காணி மோசடியில் ஈடுபட்டவர் , நில அளவையாளர் மற்றும் காணியை கொள்வனவு செய்த நபர் ஆகிய மூவரையும் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.