வீடு புகுந்து திருட்டு!!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் நேற்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் இரு வீடுகளை குறிவைத்து அவற்றின் யன்னல்களை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள், உறங்கியவர்களை மயக்க மருந்தை பயன்படுத்தி மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் 170, 000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டாருக்கு காலை எழுந்த பின்னரே திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணையின் போது இரு சந்தேகநபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை