துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் வெளியானது!


கொழும்பு - அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட பிரபல வர்த்தகரான 'கிளப் வசந்த' என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளையில் உள்ள மலர்சாலை ஒன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உடலை அங்கு வைக்க வேண்டாம் என ஜயரத்ன மலர்சாலைக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையம் ஒன்றை திறக்க கடந்த 8ஆம் திகதி சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கிளப் வசந்தவின் சடலம் இன்று (12ஆம் திகதி) ஜயரத்ன மலர்சாலையில் இறுதிச் சடங்குகளுக்காக ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில்,

நேற்றிரவு கஞ்சிபானி இம்ரான் என கூறிக்கொண்ட நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த மலர்சாலையை அச்சுறுத்தியுள்ளார்.

இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.