வீதியை விட்டு விலகி வாகனம் விபத்து!!
கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் கெப் வண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை, வெலிகந்த சிங்கபுர பகுதியில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான கெப் வண்டியில் ஆறு பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் கெப் வண்டி சாரதி உயிரிழந்ததுடன், ஏனைய ஐவரும் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சாரதி சூரியவெவ சிங்கபுரவைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார். காயமடைந்தவர்கள் 21 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் வெலிகந்த சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக பொலன்னறுவை நோக்கிப் பயணித்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை