அலையில் சிக்கியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

 


திருகோணமலையில் உள்ள நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 06 பேர் அலையில் சிக்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அலையில் சிக்கியவர்களை திருகோணமலை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து குறித்த குழுவினரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நேற்றையதினம் (06-07-2024) பிற்பகல் குறித்த குழுவினர் கடலில் நீராடச் சென்ற போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.


மேலும், பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட மூவரே அலையில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.