கிளப் வசந்த கொலையில் சிக்கிய தகவல்!!
கிளப் வசந்தவின் சடலம் வைக்கப்பட்டிருந்த பொரள்ளை மலர்ச்சாலைக்கு இரு தடவைகள் கொலை மிரட்டல் விடுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி இலக்கம் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பல்கலைக்கழக மாணவி மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் பொரள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
அதோடு குறித்த தொலைபேசி இலக்கம் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தொலைபேசியில் அழைப்பு விடுத்தது யார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (08) அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவில் வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை