துப்பாக்கிச்சூட்டில் மேலுமொருவர் உயிரிழப்பு!!

 


இன்று (08) காலை பத்து மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்பவர் கொல்லப்பட்டார்.


அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் பிரபல பாடகி கே சுஜீவா. அதுருகிரியவில் மணிக்கூண்டு கால்வாய்க்கு அருகில் உள்ள அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். கிளப் வசந்த அங்கு உயிர் இழந்த நிலையில் காயமடைந்த மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.


துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் வந்த வாகனம் என கூறப்படும் வாகனம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் அழகு நிலையம் திறப்பு விழாவில் துப்பாக்கிசூடு இடம்பெற்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.