மகனுக்கு சூடு வைத்த தந்தை!

 


வாழைச்சேனை பிரதேசத்தில் தனது மகன் நூறு ரூபாய் பணத்தை எடுத்த குற்றத்திற்காக தகப்பனால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


வாழைச்சேனை - மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேரந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் சேட் பொக்கட்டில் இருந்து நூறு ரூபாயை எடுத்து செலவளித்த குற்றத்திற்காகவே தகப்பனால் திங்கட்கிழமை இக் கொடுர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருகையில், 


தனது சேட் பக்கட்டில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபா குறைந்துள்ளதை அறிந்த தகப்பன் தனது மகனிடம் அது தொடர்பில் விசாரித்தபோது , மகன் ஆம் நான் எடுத்து செலவளித்து விட்டேன் என கூறியுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த தந்தை மாணவனுக்கு சூடு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற அடுத்தநாள் பாடசாலைக்கு செல்ல முடியாது என்றும் தனக்கு கை வலியாகவுள்ளதாகவும் மகன் கூறிய நிலையில் பாடசாலைக்கு செல்லாவிட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்திய நிலையில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான்.


பாடசாலையில் மாணவன் சோகமாக இருந்த நிலையில் வகுப்பாசிரியர் அது தொடர்பில் விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான்.


இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு முறையிட்டதை அடுத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.


அதன் பிரகாரம் மாணவனின் தந்தை கைது செயயப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுததப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.