கோமாளி அர்ச்சுனாவின் கோமாளித்தனத்தால் முதல் மரணம்-கொலை!
அர்ச்சுனாவால் பெண்ணின் பெற்றோருக்கும் கணவருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட முரண்பாட்டால் கணவன் (தற்)கொலை.
இத்தீவு முழுமைக்கும் அரச உத்தியோகத்தில் இடம்பெறும் அலட்சியங்கள் இலஞ்ச ஊழல்கள் போன்றே மன்னார் வைத்தியசாலையிலும் தொடர்ந்த மருத்துவ அலட்சியத்தால் இளம்தாயொருவர் கொல்லப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து இக்கொலைக்கெதிராக மரணமடைந்த பெண்ணினது கணவரால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இச்சட்ட நடவடிக்கையானது மன்னாரைச்சேர்ந்த பிரபல சட்டத்தரணியால் அவரது சட்ட நிறுவனத்தை சார்ந்த சட்டத்தரணிகளதும் வழிநடத்தல் மற்றும் நீதிமன்ற பிரசன்னங்களினூடு மேற்கொள்ளப்பட்டது. இந்நேரத்தில்தான் கோமாளியும் சுயநலவாதியுமான பைத்தியக்காரன் அர்ச்சுனா, குறித்த மரணத்தை தனக்கான ஆதரவுத்தளத்தை அதிகரிக்கும் நோக்கில் பயன்படுத்த முடிவெடுத்து ‘நானும் ரவுடிதான்’ என்ற வடிவேலுவின் சினிமா காட்சிபோல் திட்டமிட்டு, வைத்தியசாலைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு, அதனால் திட்டமிட்டமைபோன்றே கைதானமையும் அனைவரும் அறிந்த ஒன்று.
அர்ச்சுனாவின் குறித்த அடாவடித்தனத்திற்கெதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின்போதும், இளம்தாயினது மரணத்திற்கு நீதிகோரிய நடவடிக்கைக்கு சட்ட உதவிபுரிந்த சட்டத்தரணியினது நிறுவனமே அர்ச்சுனாவின் அடாவடிக்கெதிராகவும் நீதிமன்றில் முன்னிலையாகிறது. இங்கேதான் சுயநலவாதியும் கோமாளியுமான அர்ச்சுனா தனக்கெதிராக நீதிமன்றில் தோன்றிய சட்டத்தரணிகளை சமூகத்திற்கு ஒவ்வாதவர்களாக எதிரானவர்களாக, பெண்ணின் மரணத்திற்கு துணைபோவோராக காட்சிப்படுத்துகிறான் பகுத்தறிவற்ற தனது அன்னக்காவடிகளுக்கூடாக. சுயசிந்தனையற்ற மற்றும் சட்டத்தரணி தொழிலினது அடிப்படை தர்மம் என்னவென்பதை அறியாத அடிமுட்டாள் எடுபிடிகளும் குறித்த சட்டத்தரணிகளுக்கெதிராக பெருமெடுப்பில் வசைமாரி பொழிந்துதள்ள, அதுவரையில் பெண்ணின் மரணத்திற்கு நீதிகோரிய நடவடிக்கைக்கும் சட்ட உதவிபுரிந்துவந்த அதே சட்டத்தரணிகளை அயோக்கியன் அர்ச்சுனாவும் பிணையில் வெளிவந்து, உயிர்பறிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்தித்து தன்சுயநலனுக்காய் தூண்டிவிட, உயிரிழந்த பெண்ணின் பெற்றோருக்கும் அவளது கணவனுக்கும் இடையில் மரணத்துக்கு நீதிகோர பயன்படுத்தும் சட்டத்தரணிகள் தொடர்பில் முரண்நிலை முளைகொள்கிறது.
குறித்த முரண்பாட்டிற்கு ஆதாரமாக அந்நேரத்தில் அயோக்கியன் அர்ச்சுனா வெளியிட்ட காணொளிகளில், பெண்ணிற்கான நீதிகோரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான சட்டத்தரணிகள் தொடர்பில் தொடர்ந்து பேசியிருந்தமை இதன் வெளிப்பாடு என்பதனை அறளைகள் அறிய வாய்ப்பில்லை. தற்போதேனும் அறிய ஆவல்கொண்டால் பின்சென்று நோக்கலாம். தனது செல்வாக்கை அதிகரித்து அதன்மூலம் தனது கணக்குமீதிகளை உயர்த்திக்கொள்ளும் குள்ளநரித்தனமும், அதற்கு துணைபோன அரைகுறை அன்னக்காவடிகளது முட்டாள்தனமும் இணைந்து குடும்ப பிரச்சினையினை தூண்டிவிட, அதன்விளைவு ஏலவே தாயை பறிகொடுத்திருந்த பச்சிளம் குழந்தை இன்று தந்தையையும் பறிகொடுத்து அனாதையாகி நிற்கிறது. அக்குழந்தையினது தாயின் கொலைக்கு எவ்விதத்தில் மருத்துவ அலட்சியம் காரணமோ, அதேயளவு அக்குழந்தையின் தந்தையின் மரணத்திற்கு அயோக்கிய கோமாளி அர்ச்சுனாவும், அவனை கொண்டாடும் அடிமுட்டாள் அன்னக்காவடிகளுமே என்பது நிறுத்திட்டமான உண்மையாகும். தாயின் மரணத்திற்கு காரணமானோர் தண்டிக்கப்பட ஒருசில வீதங்கள் சாத்தியப்பாடு இருப்பினும், தந்தையினது மரணத்திற்கு காரணமான அயோக்கியன் அர்ச்சுனாவும் அடிமுட்டாள் அன்னக்காவடிகளும் தண்டிக்கப்படப்போவதே இல்லை இதுவிடயத்தில். தற்போது மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலையென கதையளக்க தொடங்கியுள்ள மனச்சாட்சியே இல்லாத சுயநலவாதியும் முட்டாள்களும் என்றேனும் மனச்சாட்சியை உணர்ந்தால் அது அவர்களை என்றாவது தண்டிக்கட்டும்.
கருத்துகள் இல்லை