கருணைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி?

 


தேவையான பொருட்கள்

            

கருணைக்கிழங்கு-1/2கிலோ

சின்னவெங்காயம்-1/4கிலோ

இஞ்சி-1துண்டு

பூண்டு-1கட்டை 

சோம்பு-1தேக்கரண்டி

கசகசா-1/2தேக்கரண்டி

கிராம்பு-5

ஏலக்காய்-2

சாம்பார்த்தூள்- 2 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

மிளகு-  1 தேக்கரண்டி 

பட்டை- 1 துண்டு

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, எண்ணெய்- தேவைக்கேற்ப 

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் : 

வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு,சோம்பு, சீரகம், ஏலக்காய்,கிராம்பு,இஞ்சி, பூண்டு.

            

            

செய்முறை

         

முதலில் கருணைக்கிழங்கை சதுர வடிவில் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். 

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,

சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.அத்துடன், சாம்பார்த்தூள்,உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும். பின்னர் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். பின் வேகவைத்துள்ள கிழங்கை சேர்த்து தீயை குறைத்து வைத்து நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.இப்போது சுவையான கருணைக் கிழங்கு குழம்பு தயார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.