பேருவளை இளைஞன் ஜனாதிபதியைச் சந்தித்தார்!
இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை சஹ்மி ஷஹீத், ஜனாதிபதியை சந்தித்தார்.
இச்சந்திப்பில் இளைஞனின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி அவருக்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கினார். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் காலங்களில் அவரின் செயலூக்கமான பங்களிப்பை பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை