தம்பி டாக்டர் செந்தூரன்க்கு கடிதம்!
தம்பி செந்தூரன்,
நான் நலம் . உங்கள் நலமறிய ஆவல்.
நீங்கள் உடல் உள நலமோடு இருக்க வல்லிபுர ஆழ்வாரை வேண்டுகிறேன்.
தண்ணி குடிச்சு உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டீர்கள் எண்டு கேள்விப்பட்டம் ராசா! வலு சந்தோசம்.
சரியான வெய்யில் மோனை. நிறைய தண்ணி குடி அப்பு! கறுத்துப்போடுவாய் கவனம். பேந்து கரியா இருக்கிறதால ஒருத்தனும் என்ர சொல்லைக்கேக்குறாங்கள் இல்லை எண்டு கவலைப்படுவீர்!
அர்ச்சுனா வேற நக்கலடிப்பான்!
நீங்கள் அர்ச்சுனாவைப்பாத்து "லூசு" எண்டியள். நல்ல மன மல மருத்துவரைப்பாக்கச்சொல்லி அறிவுரை சொன்னியள்.
நீங்கள் சொன்ன அறிவுரையை மந்திகை சந்தியில உள்ள உங்கட கிளினிக்கு பக்கத்தில நிக்கிற ஆட்டோக்காற பொடியள் உங்களுக்கு திருப்பி சொல்லுறாங்கள்.உவங்கட நக்கலப்பாத்தியளோ தம்பி!
"செந்தூரன் லூசா அல்லது லூசுமாதிரி நடிக்கிறானா?" எண்டு என்னிடம் கேக்கினம் தம்பி. எனக்கு என்ன பதில் சொல்லுறது எண்டு தெரியவில்லை.சரியான கவலையாக்கிடக்கு!
இன்னும் சிலர் "செந்தூரன் தண்ணி அடிச்சிட்டு வெறியில கதைக்கிறானா?" எண்டும் கேக்கினம் தம்பி.
இந்தக்கேள்வி ஏற்கனவே நீங்கள் அர்ச்சுனாவைப்பாத்து கேட்ட கேள்விதான்!
இருந்தாலும் உங்களின்ர பால் வடியுற முகத்தைப்பாத்து இப்பிடி கேக்க எப்பிடித்தான் மனம் வருகுதோ தெரியவில்லை மோனை!
எனக்கும் உங்களைமாதிரித்தான் என்ன பதில் சொல்லுவது எண்டு தெரியாமல் நாக்கு தள்ளுது தம்பி!
எப்பிடியெல்லாம் மனச்சாட்சி இல்லாமல் உங்களைப்பாத்து கேள்வி கேக்குறாங்கள்.மனிசரா உவங்கள்?
உங்களைப்பாத்து "லூசன் மாதிரி நடிக்கிறான்"
"கண் சிவப்பாக்கிடக்கு. குடிச்சிட்டு கதைக்கிறான்"
"இவன் லூசா லூசுமாதிரி நடிக்கிறானா?"
"இவன் ஒரு மருத்துவ மாபியாவின் கைக்கூலி"
"சத்தியமூர்த்தியும் கேதீஸ்வரனும் அர்ச்சுனாவுக்கு எதிராக இறக்கிவிட்ட ஆள்"
இப்பிடியெல்லாம் கண்டபடி உங்களை ஏசுறாங்கள் தம்பி! கேக்கவே நெஞ்சு நோகுது தம்பி!
நீங்கள் ஒரு "நசுக்கிடா கள்ளன்" !
"அப்பாவி மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு குறளிவித்தை காட்டுறான்"
எண்டெல்லாம் கேவலமாக எழுதுறாங்கள் தம்பி! வாசிக்கும் போது கண் கலங்குது தம்பி!
"எல்லாமாடும் வடக்கால ஓட சுப்பற்ற நொண்டி மாடு தெற்கால ஓடிச்சாம்" எண்டமாதிரி நீங்களும் குறுக்கால ஓடுறியளாம் தம்பி!
பேஸ்புக்கில likes வாங்கவும் attention seeking ஆகவும் தான் நீங்கள் குறளிவித்தை காட்டுறியள் எண்டு மனச்சாட்சியே இல்லாமல் உங்கள் மேல் குற்றம் சுமத்துறாங்கள் மோனை!
தம்பி!
மன்னாரில் இருந்து பருத்தித்துறை போன கையோட;
அர்சுனாவுக்கு கடிதம் எழுதினமாதிரி உங்களைப்பற்றி வசைபாடும் சனத்துக்கும் ஒரு கடிதம் எழுதவேணும்.
கடைசியா எழுதின கடிதத்தைவிட "கேவலமான இன்னும் பல சொற்களோடு" சனத்தை திட்டி ஏசி எழுதவேணும்.
இன்னும் நிறைய நிறைய கடிதங்கள் நீங்கள் எழுதவேணும் தம்பி!
சத்தியமூர்த்திக்கு ஒரு கடிதம்!
பிரணவன் சேருக்கு ஒரு கடிதம்!
கேதீஸ்வரனுக்கு ஒரு கடிதம்!
மந்திகை ஆசுப்பத்திரிக்கு ஒரு கடிதம்!
சாவகச்சேரி சனத்துக்கு ஒரு கடிதம்!
ரம்பாவுக்கு ஒரு கடிதம்!
இப்பிடி கனக்க ஆக்களுக்கு நீங்கள் கடிதம் எழுதவேணும் ராசா!
கடிதம் எழுதுறதில சம்பந்தரையும் கருணாநிதியையும் நீங்கள் முந்தவேணும் தம்பி!
தம்பி உங்கள் மேல் சேறு பூசுபவர்களை நினைத்து கவலைப்படாதையுங்கோ.அவங்கள் எல்லாம் நீங்கள் சொன்னமாதிரி தமன்னாவை பாக்க பனையில ஏறி நிண்ட கூட்டம்.
கணக்கில எடுக்கவேண்டாம் தம்பி!
விசயத்துக்கு வாறன் தம்பி!
இண்டைக்கு அடிச்ச "banner" போல இன்னும் நாலைஞ்சு Banner அடிக்கவேணும்.
மந்திகை ஆசுப்பத்திரி, சாவகச்சேரி ஆசுப்பத்திரி, யாழ்ப்பாண ஆசுப்பத்திரிக்கு முன்னால நீங்கள் உண்ணாவிரதம் இருந்து காட்டவேணும். அப்பதான் நீங்கள் ஆரெண்டு இந்த சமூகத்துக்கு தெரியும்.
அப்பிடியே யாழ்ப்பாணம் ஆசுப்பத்திரிக்கு முன்னால உண்ணாவிரத போராட்டத்தை முடிச்சுக்கொண்டு தெல்லிப்பளை ஆசுப்பத்திரிக்கு போங்கோ!
அங்கையும் நீங்கள் போராடவேணும்.
தற்சமயம் உங்களைப்பிடிச்சு தெல்லிப்பளை ஆசுப்பத்திரியில் உள்ள போட்டிடுவாங்கள்.
தம்பி அப்பிடி ஏதும் நடந்தால் நாங்கள் இருக்கிறம். உங்களை கைவிடமாட்டம்.
தெல்லிப்பளை ஆசுப்பத்திரிக்கு முன்னால Banner அடிச்சு நாங்கள் உண்ணாவிரதம் இருப்பம்.
ஏனெண்டால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அர்ச்சுனாவுக்கு எதிராக களம் இறங்கவேணும் தம்பி!
நீங்கள் ஆரேண்டு இந்த சமூகத்துக்கு காட்டும் வரை ஓயக்கூடாது தம்பி!
உங்களோட சேர்ந்து நாங்களும் நி(ந)க்குறம் தம்பி!
இப்படிக்கு;
அன்புடன்
உங்களின் பிறைவேற் கிளினிக் வாடிக்கை நோயாளர்
#அம்மாச்சி
பிற்குறிப்பு: கனக்கத்தரம் உங்களுக்கு கோல் அடிச்சன். மெசேஜ் அனுப்பின்னான். நீங்கள் ஒண்டும் பறையவில்லை. இந்தகடிதத்தை பாத்திட்டு எடுப்பியள் எண்டு நம்புறன்.
கருத்துகள் இல்லை