புலம்பெயர்ந்தவர்கள் புலிக்கொடிகளை பாவித்து காசு உழைக்கலாம்-அர்ச்சுனா!!
என்னுடன் கதைக்கும் போது ரெக்கார்ட் ஆகுமா என கேட்டுவிட்டு கதைப்பவர்கள் இருப்பவர்கள் தான் கூட..
நான் உண்மையாகத்தான் கதைக்கிறேன் ரெக்கார்டு ஆகினாலும் பரவாயில்லை என்று சொல்பவர்கள் எவருமே இல்லை..
எதிர்க்கட்சித் தலைவர் கதைத்ததை ஓட்டோ ரெக்கார்ட் போடாமல் இருந்தால் இப்போதைக்கு நான் இவர்களுடைய விமர்சனத்தின் படி நானே பிச்சை எடுக்க சென்றதாக அமைந்திருக்கும்..
சாவகச்சேரி வழக்கு தொடக்கம் மன்னார் வழக்கு வரை அரசியல் ஆரம்பம் தொடக்கம் இன்று வரை என்னுடன் கதைத்த அனைத்தும் ரெக்கார்ட் ஆகி தான் இருக்கிறது..
வைத்தியர் அசாத்திடம் நான் கதைத்து விட்டு தான் உள்ளே சென்றேன் அனுமதி எடுத்தேன் என்பதற்கான ரெக்கார்டிங் கூட இருக்கிறது..
இப்போது உங்களுக்கு தெரியும் ரெக்கோடிங் என்பது எவ்வளவு முக்கியம் என்பது..
சாவகச்சேரி வைத்தியசாலையில் நான் எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கான காரணங்களையும் ரெக்கார்ட் பண்ணி வைத்திருக்கிறேன்..
அவைகள் இல்லாவிடில் நான் தனிப்பட்ட ரீதியில் பழிவாங்க நடவடிக்கை எடுத்தேன் என்பதை ஒரு கூட்டமாக சொல்லும்போது உண்மையை நிரூபிப்பது சரியான கஷ்டம்..
நான் இந்திமாவுடன் கதைத்தது கூட நானே தான் ரெக்கார்ட் பண்ணினேன்..
அதை அவர்களுக்கு அனுப்பி தான் அவர்கள் லீக் பண்ணினார்கள்..
நாங்கள் மனதில் சுத்தமாக இருப்போமானால் யார் ரெகார்ட் பண்ணினால் என்ன..
யாருக்காக உமது தலைவன் தன்னை அர்ப்பணித்தானோ அவன் இன்று உயிருடன் இருந்திருந்தால் எமது தமிழர்களைப் பார்த்து மனம் நொந்து செத்திருப்பான்..
இதே தமிழர்களுக்காகத்தான் நானும் எனது தொழில் குடும்பம் எல்லாவற்றையும் பணயம் வைத்து உண்மைகளை வெளிக்கொணர்ந்தேன்..
வெளிநாடுகளில் இருக்கும் சுகபோகம் அனுபவிக்கும் பலர் யாழ் மக்கள் காணும் துன்பங்களை மட்டக்களப்பில் நடக்கும் அட்டூழியங்களை சற்று அளவிலும் கூட கண்டு கொள்வதில்லை..
வியாழேந்திரனும் பிள்ளையானும் மட்டக்களப்பில் தமிழ் மக்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்
வெளிநாட்டில் ஒரு கூட்டம்
எவ்வாறாக புலிக்கொடிகளை பாவித்து காசு உழைக்கலாம்.. என்று கூவி கூவித்துக் கொண்டிருக்கிறது..
எல்லாக் கடைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உண்டியல்களை வைத்து காசு சேர்த்து வரலாற்றைக் கொண்டாடுவதாக மக்கள் பணத்தில் ஹெலிகாப்டரில் சாமர்த்திய விடு கொண்டாடுகிறார்கள்..
ரிச்சா பீச்சா என அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களை திசை திருப்பும் வண்ணம் மக்கள் மனதில் விடுதலை வேட்கைகளை இல்லாமல் பண்ணுவதற்காக சுய அரசியல் செய்கிறார்கள்..
மக்களுக்கு விளங்காத வரை அவர்களுக்கு உதவுபோல் அவ்வாறு உதவுவலாம் என்பதை எல்லா அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது..
மிகவும் மன நோகும்
கவலை என்னவென்றால் அத்தகைய மக்களுக்காக தான் நானும் இந்த போராட்டத்தில் இறங்கினேன் என்பது..
இப்போதும் தளரவில்லை..
ஆனால் அனுராவிடம் டீல் அடித்தார் என்று கதைத்தவர்கள் மௌனமாகி போனார்கள்..
சகித்துடன் டீல் அடித்து என கதைத்தவர்கள் கடைசி லைவுடன் மௌனமாகி இருப்பார்கள்..
உங்கள் அரசியல் பிரதிநிதிகள் என நீங்கள் தூக்கிக் கொண்டு செல்லும் ஒரு சிலர்கள் முக்கியமாக சுமந்திரன் சாணக்கியன் சிறிதிறன் போன்றவர்கள் உங்களை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..
அவர்களின் பின்னாலே செல்லுங்கள்..
உங்களுக்குரிய அரசியல் முடிவு காத்துக்கொண்டிருக்கிறது..
என்னால் முடிந்தவரை செய்திருக்கிறேன் செய்வேன்..
ஆனாலும் இத்தகைய இழிமக்கள் ஒரு சிலருக்காக எனது மென்மக்கள் எவரையுமே நான் கைவிடமாட்டேன்..
தமிழினம் அழிந்து போய்விட்டது என்பதற்கு ஒன்றிரண்டு முகப்புத்தகப் பதிவுகளை சான்றாக அமையும்..
அடிப்படை உரிமைகள் தமிழருக்கான இன அழிப்பு பற்றிய புரிதல்கள் எமது தமிழ் இனத்தின் எதிர்காலம் எல்லாம் உங்களைப் போன்றவர்களின் கைகளில் தான் உள்ளது என்று நினைக்கும் போது இருந்து விட்டே போகட்டும் என நினைக்கின்றேன்..
என்னைக் கூவி கூவி பிழையாக கூறுவார்கள் நீங்களே தமிழர்களின் எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்..
நான் இந்த அரசியலில் இருந்து விலகிப் போனால் கூட உங்கள் தலைமைகள் நீங்கள் கூறுபவர்கள் ஒரு காலத்தில் நன்றாக உழைத்து பிள்ளைகளை குடும்பத்தை வெளிநாட்டில் வைத்துக் கொண்டு காணாமல் போய்விடுவார்கள்..
தமிழனுக்கு உரிய எதிர்காலம் கேள்வியாக்கப்படுகின்றது பட்டிருக்கிறது..
உங்கள் பொது வேட்பாளர் தெரிவு நல்லது..
நீங்கள் அவருக்கு வாக்கு செலுத்துங்கள்..
அனுராவுக்கு விருப்பமானவர்கள் அனுரவுக்கு வாக்கு செலுத்துங்கள்..
சஜித்துக்கு விருப்பமானவர்கள் சஜித்துக்கு வாக்கு செலுத்துங்கள்..
ரணிலுக்கு கூட நீங்கள் வாக்குகளை செலுத்தலாம்..
உங்கள் முடிவு உங்கள் கைகளில்..
உங்களுக்கும் உங்களுடைய தற்போதைய அரசியல் தலைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..
நான் இருந்திருந்தால் சுத்தமான அப்பழுக்கற்ற அரசியலையே செய்வேன்..
மக்களை ஏமாற்றி பணம் சேர்த்து அவற்றைக் கொண்டு சுகபோகம் அனுபவித்து கீநொச்சி முல்லைத்தீவு மன்னார் மட்டக்களப்பில் மக்கள் தினம் தினம் சாக சுகபோகம் அனுபவிக்க என்னால் முடியாது..
உங்கள் தலைவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளட்டும்..
எல்லாம் வல்ல இறைவனுக்காக தமிழ் மக்களுக்காக ஒரு முறை மன்றாடிக் கொள்கிறேன்..
இந்த முறை ஜனாதிபதி தேர்தல் யாருடைய வாக்கு உங்களுக்கு என்பதை உங்கள் தற்போதைய தலைவர்கள் சொல்வார்கள் அதன்படியே செய்யுங்கள்..
எனக்காக சஜித்துக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்..
நான் அந்த முடிவிலிருந்து விலகிக் கொள்கிறேன்..
ஒருவனை அழைத்து அவனை மேடை ஏறி எனக்காக வாக்கு வேண்டி தருகிறாயா என கேட்டு மீண்டும் இது முஸ்லிம் மேடை ஆகவே வடக்கில் போய் இருங்கள் நான் அங்கு வருகிறேன் எனக் கூறிய தலைவர் உமா சந்திர பிரகாஷின் தலைவரே அன்றி நான் எந்த கட்சிக்கும் கடை போனவன் அல்ல..
நான் தமிழனாகத்தான் சென்றேன்..
அந்த ரெக்கார்டிங்கை கேட்டு பார்க்கலாம்..
தமிழனாக மேடையை விட்டு இறங்கினேன்..
அவ்வளவுதான்..
அதை தாங்காத முஸ்லிம் இனத்துவசிகள் தங்களுக்கு விரும்பியவாறு கீழே பதிவிடலாம்..
முஸ்லிம்களை விரும்பிய கடைசித் தமிழனை நீங்களே கொன்றிருக்கிறீர்கள்..
இந்த ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கான தனிப்பட்ட சுய விருப்பின் பேரில் நீங்கள் வாக்கிடலாம்..
நான் ஒரு தடையல்ல..
இப்படிக்கு
வைத்திய கலாநிதி இ. அர்ச்சுனா
கருத்துகள் இல்லை