சிறுமியிடம் மோசமாக நடந்துகொண்ட முதியவர்!

 


தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தமிழகம், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுந்தர்ராஜபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுந்தர்ராஜபுரம் கிராமத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பாடசாலையில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

குறித்த சிறுமி வசிக்கும் வீட்டின் எதிரில் கூலி வேலை செய்யும் 55 வயதான குருவையா என்பவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த குறித்த சிறுமியை அழைத்த குருவையா தனக்கு தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார்.

தண்ணீர் கொடுக்க குருவையா வீட்டிற்குள் அந்த சிறுமி சென்றவுடன் வீட்டின் கதவை பூட்டி அந்த சிறுமியிடம் குருவையா தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பில் யாரிடம் கூறினால் கொன்று விடுவேன் என கூறி மிரட்டி அனுப்பியதாகவும் தெரிகிறது. இதனால் பயந்து போன அந்த சிறுமி நடந்தவற்றை யாரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குருவையா அந்த சிறுமிக்கு மீண்டும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தனர்.

அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குருவைய்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.