மரம்
கொழுகொம்பற்ற
கொடியாக
அல்லாடிக் கொண்டிருக்கிறது
அந்த மரம்...
மண்ணிலே வேரூன்றி
மார்தட்டிக்
களிப்புற்ற
மரம்தான் அது...
கறையான்களையும்
புற்றீசல்களையும்
ஏனோ
கவனிக்கத் தவறிவிட்டது.
அதுமட்டுமில்லை
மனம் நாளை
வனமாகுமோ என்று
சில மரக்கூட்டம்
பயம் கொண்டது.
ஒரு மரத்தை அழிக்க
பல மரங்கள்
கூடினவே...
ஐயகோ....
வீழ்ந்து போன மரத்தின்
வேரிருக்கிறது..
பற்றிப் படரத்தான்
கொழுகொம்பு ஏதுமில்லை.
ஈரப்பசையும்
கொஞ்சம் நீருமிருந்தால் போதும்
அது
நாளை மீண்டும் வனமாகும்....
கோபிகை
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை