20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!!

 





குருணாகல் - தம்புள்ளை வீதியில் அதிக இரைச்சலுடன் பயணித்த 20 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பூகொடையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத்தகடுகள் போலியானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சைக்கிள்களின் மொத்த பெறுமதி சுமார் 4 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கையில், சேருவாவில பிரதேசத்தில் உள்ள சுமார் 60 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை மற்றும் புத்தகப் பைகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்காக நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.