யாழ்ப்பாண - தமிழக இணைப்பாக சிவகங்கை!📸


நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை 15 ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளது. 


இந்த கப்பல் சேவைக்கு அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினம் அண்மையில் கொண்டுவரட்ட நிலையில் இன்று பரிட்சார்த்தமாக நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு  வருகைதந்தது.

 

இக்கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும் பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகளும் உள்ளன.


ஒருவர் 60 கிலோ வரை பார்சல் எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்ல முடியும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.