வீதியில் நடமாடும் புலிகள்!!

 


கடந்த சில நாட்களாக புத்தல - கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் பிரதேசவாசிகள் இதனால் தாம் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த புலிகளானது பெரும்பாலும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் வீதியில் நடமாடுகின்றன.

இநிலையில் புத்தல - கதிர்காமம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாகவும் உணவு தேவைக்காகவும் இந்த புலிகள் இவ்வாறு வீதியில் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.