விபத்தை ஏற்படுத்திய கப்பல் தடுத்து வைப்பு.!


காலி கடற் பகுதியில் பல நாள் மீன்பிடி படகினை மோதிய கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

லிபியாவில் இருந்து பங்களாதேஷ் நோக்கி உரங்கள் ஏற்றிச் சென்ற கப்பலே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


குறித்த கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கைப்பற்றப்பட்ட கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


குறித்த படகு சிறியதாக இருந்ததனால் மாலுமிக்கு கப்பல் விபத்தில் ஏற்படுத்தியமை தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.