‘யுக்திய’ நடவடிக்கை பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு!
‘யுக்திய’ நடவடிக்கைகளுக்காக விசேட கடமையாற்றிய பொலிஸார் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில், யுக்திய நடவடிக்கைக்கு சிறப்பு அதிகாரிகளை ஈடுபடுத்தியமையால் பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரிவுகளின் கடமைகள் தடைப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளதாகவும் பதில்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை