திராய்மடு பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலய வருடாந்த திருவிழா
மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்குட்பட்ட, திராய்மடு பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின், 18வது வருடாந்த திருவிழா இன்று காலை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பங்கு தந்தை கிரிஸ்தோபர் வின்சன் லோஸ் அடிகளார் தலைமையில் திருவிழா ஆரம்பமாகியிருந்தது.
நேற்று மாலை திருச்ஜெபமாலையும் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்று, அன்னையின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது
திருவிழா கூட்டுத் திருப்பலி இன்று மறை மாநில குரு முதல்வர் ஜோர்ச் ஜீவராஜ் அடிகளார் தலைமையில் பங்குத் தந்தை கிரிஸ்தோபர் வின்சன் லோஸ் அடிகளாருடன் அருட் தந்தையர்கள் இணைத்து ஒப்புகொடுத்தனர்.
பங்கு மாணவர்களுக்கு தேவ நற்கருணை ,உறுதி பூசுதல் அருட் சாதனங்கள் வழங்குதல் என்பனவும் நடைபெற்றன.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்று, கொடியிறக்கும் நிகழ்வு ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது
தொடர்ந்து அன்னையின் திருச்சொரூப ஆசிரும் இடம்பெற்றது .
பெருமளவான மறை கோட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்
கருத்துகள் இல்லை