நண்பகல் 12.00 மணி வரை 45 சதவீத வாக்குகள்!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.
இதன்படி நாடு முழுவதும் நண்பகல் 12.00 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கம்பஹா – 52%
கேகாலை – 49%
நுவரெலியா – 45%
இரத்தினபுரி – 58%
மன்னார்- 40%
முல்லைத்தீவு – 46%
வவுனியா – 51%
காலி – 42%
மாத்தறை – 35%
மட்டக்களப்பு – 23%
குருநாகல் – 50%
பொலன்னறுவை – 44%
மொனராகலை – 32%
பதுளை – 40%
யாழ்ப்பாணம் – 35%
புத்தளம் – 42%
அனுராதபுரம் – 50%
திருகோணமலை – 51%
மேலும்மதியம் 1 மணி நிலவரப்படி, கொழும்பு, குருநாகலில் 50% வாக்குகள் பதிவாகியுள்ளன. கண்டி, மத்தறை, பதுளையில் 40% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், பொலன்னறுவை, ரத்தினபுரியில் 55% வாக்குகளும், கம்பஹாவில் 52% வாக்குகளும், திருகோணமலையில் 51% வாக்குகளும், புத்தளத்தில் 42% வாக்குகளும் பதிவாகியுள்ளன. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வன்னியில் 46.82% வாக்குகள் பதிவாகியுள்ளன, யாழ்ப்பாணத்தில் 35% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கருத்துகள் இல்லை