கம்பி வலையில் சிக்குண்ட சிறுத்தை!

 


மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவிலுள்ள புதிய பாலத்துக்கு அருகாமையில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளது.


சிறுத்தை வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு தெரியப்படுத்தினர்.


இதனையடுத்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.