வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு!

 


கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓ வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்தியாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.


மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O+ மற்றும் O- இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே குருதி கொடை வழங்கும் அன்பர்கள் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொண்டு தினமும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை இரத்த தானம் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.


ஆகவே, மேற்படி அவசர அவசிய நிலைமயினை கருத்தில் கொண்டு குருதி கொடை அளிக்குமாறு பொது மக்களிடம் கிளிநொச்சி மாவட்ட இரத்த வங்கி கோரியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.