ஆமை கடத்தியவருக்கு அபராதம்!!

 


காலி - கலேகன பகுதியில் ஆமை ஒன்றை வைத்திருந்த நபரொருவருக்கு காலி பிரதான நீதவான் இசுரு நெத்திகுமாரவினால் 35,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காலி கலேகன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ரணேபுர ஹேவகே அஜித் என்பவரிடமிருந்து நான்கு கிலோ எடையுடைய ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில் தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள குளமொன்றில் இனப்பெருக்கம் செய்வதற்காக இந்த ஆமையை கொண்டு செல்வதாக தெரிவித்திருந்தார்.

மேலதிக விசாரணைகளில் குறித்த ஆமையை இறைச்சிக்காக விற்பனை செய்யவிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த ஆமை ஹிக்கடுவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.