தீப்பற்றியது வாகனங்கள்!!


 பாதுக்க, மாஹிங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன், கெப் வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி என்பன திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹொரணை நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து இந்த தீயை அணைக்க முயற்சித்துள்ளதாகவும், அதற்குள் மூன்று வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டை சுற்றியுள்ள காணி பகுதிக்குள் வெளிநபர்கள் எவரும் நுழைய முடியாது எனவும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தாரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்து மற்ற வாகனங்களுக்கும் தீ பரவியதா என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.