வெளியநாடு பறக்கும் நாமலின் உறவுகள்!!
நாமல் ராஜபக்சவின் மனைவியின் (Limini Weerasinghe),தாயார் இரண்டு பிள்ளைகள், இரண்டு பணிப்பெண்கள் மற்றும் மற்றொரு பெண் உறவினர் ஆகியோர் நாட்டைவிட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் இன்று காலை 20 கட்டுநாயக்க விமான நிலையத்தின் "சில்க் ரூட்" முனையத்தின் ஊடாக டுபாய் சென்றுள்ளனர். இந்த தகவலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பல திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 10.05 மணிக்கு டுபாய் நோக்கிப் புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-651 விமானத்தில் இந்தக் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
ஒரு பயணிக்கு 52 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கும் சில்க் ரோடு டெர்மினல் வழியாக அவர்கள் சம்பந்தப்பட்ட விமானத்திற்குள் நுழைந்துள்ளனர்
இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமான சேவைகள் இல்லை எனவும், அவர்கள் டுபாய் சென்று அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நாளையதினம் இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந் நிலையில் , பசில் ராஜபக்க்ஷவும் இன்று நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவதுடன் , கோட்டாபய ராஜபக்க்ஷவும் இலங்கையில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை