திருப்பதி தரிசனம் முடிந்து நாடு திரும்பிய பொலிஸ்மாதிபர்!

 


முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலுக்குச் சென்றுவிட்டு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தேஷ்பந்து தென்னகோன் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அவர் நாட்டை விட்டு வெளியேறிய விமானத்தின் இலக்கம் கூட சில சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த நிலையில் அவர் மத வழிபாடுகளில் ஈடுபட இந்தியாவுக்கே சென்றிருந்ததாகவும் மீண்டும் அவர் நாடு திரும்புள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய தேஷ்பந்து தென்னகோன், நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.