லொறியில் கடத்தப்பட்ட மர்மப்பொருள்!!
வென்னப்புவ வெள்ளமன்கரய மீன்பிடி துறைமுகத்தில் 80 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ வெள்ளமன்கரய மீன்பிடி துறைமுகத்தில் இறக்கிவிட்டு, லொறியில் ஏற்றிச் செல்லும்போதே கடற்படை மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பீடி இலைகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நாத்தாண்டிய கலால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட இந்த பீடி இலைகள் இன்று பிற்பகல் ராஜகிரிய கலால் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
புதிய கலால் திணைக்கள ஆணையாளர் யு.டி.என் ஜயவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த பீடி இலைகளை ஏலத்தில் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை